Friday 16 January 2015

I Virus influenza h4N2 Facts, News, Symptoms, Causes, effects

I Virus - h4N2 influenza A virus Facts, details, news, Symptoms, Causes, Prevention, Treatment - Hunchback

What is I Virus?
Definition: 'I' Virus is the Influenza virus of type A. The influenza virus consists of eight RNA strand. The h and N full form is hemagglutinin (H) and neuraminidase (N) respectively. There are 18 different H antigens (H1 - H18) and N antigens has 11 different N (N1 to N11). Variations in the chemical character will give different influenza virus. Symptoms of influenza are respiratory problems and muscular aches.
 

I Virus – Causes, Symptoms, Prevention, Treatment

The I virus (H4N2 influenza virus) basic characteristic is changing physiology. The influenza virus will not transfer to humans directly from the environment. Rarely, it is observed in human being.
H4N2 influenza virus develops through 3 stages. In the first stage, anterior pituitary glands grow very fast and the epithelial cells forming mature glands.
In the second stage epithelial cells will become flatter and lumen enlarges abnormally. Influence of adreno cortical hormones, full secretory activity.
The third stage or final stage of H4N2 influenza virus is the development stage where resting glands in the formed ducts. It will be like a Mammary tumour virus (MTV).
- See more at: http://www.kinindia.in/edu/1908-i-virus-influenza-h2n4-facts-movie/#sthash.pXzYYnJS.dpuf


Types of influenza virus (Virology)
Influenza virus is classified into 3 types
Influenza virus A
Influenza virus B
Influenza virus C

About I Virus Background, Orgin, History, Host
Influenza A virus mainly affects birds and rarely in mammels. Viruses are transmitted from wild aquatic birds to domestic poultry, and then to human influenza pandemics. Rarely, it leads to death.

I Virus - Causes, Symptoms, Prevention, Treatment
The fundamental characteristics of the I virus are changing physiology. Usually I virus will not transfer to humans through infection or from the environment. A comprehensive study of virus-induced cell alterations must therefore take into account the intimate biological modifications which normally arise in the individual cell as well as in its immediate environment.
 




I Virus Effects and How it works
Study shows it has 3 stages. In the 1st stage anterior pituitary glands grow fast and epithelial cells forming mature glands.
In the 2nd stage epithelial cells get flattened and lumen enlarges. Influence of adreno cortical hormones, full secretory activity.
The 3rd stage is the final stage of development where resting glands in the ducts which are formed. It shows the similar image like Mammary tumour virus (MTV).

Technical/Medical terms:
Hunchback (Kyphosis)
Adreno Cortical
h4N2 influenza

Movies based on I Virus - h4N2 influenza

In a recent movie "I" is based on I virus. In this film, I virus is injected to hero (Vikram) and soon victim starts to see the symptoms like hair fall, weaking of muscles, loss of weight, spinal problems. When patient enters into the final stage, he gets hunch back. At a later stage, he gets treatment by a doctor and slowly he will be cured by medicine and exercise.
Ai Movie director: Shankar.
Actors: Vikram and Amy Jackson.
 Structure, properties, and subtype nomenclature
Human influenza virus
Influenza vaccine
Evolution
I virus DNA, epidemiology,labelled, pathogenesis
Watch I virus in youtube
Structure, properties, and subtype nomenclature
Human influenza virus
Influenza vaccine
Evolution
I virus DNA, epidemiology,labelled, pathogenesis
Watch I virus in youtube
Definition of I Virus: A type of Influenza virus h4N2 is called as I virus, a novel virus invented or man made virus. This type influenza virus is rarely seen infect human being. It is mostly observed to affect the birds and animals. It is labelled as 2 strands of hemagglutinin (H) and 4 strands of neuraminidase (N). H antigens vary from H1 to H18 and N antigens varies from N1 to N11, totally these 18 H and 11 N various combinations give rise to different influenza virus based on chemical charteristics.
I virus pictures, diagram, images, photos, structure, 3D Model
I Virus full details, Causes, Symptoms, Prevention, Treatment

I Virus – Causes, Symptoms, Prevention, Treatment

The I virus (H4N2 influenza virus) basic characteristic is changing physiology. The influenza virus will not transfer to humans directly from the environment. Rarely, it is observed in human being.
H4N2 influenza virus develops through 3 stages. In the first stage, anterior pituitary glands grow very fast and the epithelial cells forming mature glands.
In the second stage epithelial cells will become flatter and lumen enlarges abnormally. Influence of adreno cortical hormones, full secretory activity.
The third stage or final stage of H4N2 influenza virus is the development stage where resting glands in the formed ducts. It will be like a Mammary tumour virus (MTV).
I Virus - h4N2 influenza Structure, Anatomy, RNA
I Virus – h4N2 influenza Structure, Anatomy, RNA

List of movie based on H2N4 influenza virus AKA I Virus

Only very few movies are made based on influenza virus and mostly this will cover less portions. Recently, a Tamil movie Ai AKA I (Directed by Shankar) released in India. H4N2 is a type of influenza virus injected to the hero (Vikram) and as a result he becomes hunch back. Vikram (as Lingesan) aims to win Mr. India, after winning the Mr. Tamil Nadu title unfortunately he becomes the ad film model and pair up with Diya (Amy Jackson). They start loving each other. The bad guys who hate Vikram attacks him, but he escapes. Then they will inject H4N2 influenza virus. Within a few days he will see the symptoms like more hair fall, weakness, loss of weight, tumours and then slowly he becomes hunch back. Then will take revenge and after that a doctor gave treatment for him for few years. With medicine and daily exercise he slowly gets cured.
h2N4 influenza - I Virus effects showed in Ai Movie - Vikram
h4N2 influenza – I Virus effects showed in Ai Movie – Vikram
- See more at: http://www.kinindia.in/edu/1908-i-virus-influenza-h2n4-facts-movie/#sthash.pXzYYnJS.dpuf

Sunday 11 January 2015

முடக்குவாதத்தில் இருந்து விடுதலை

  •  
     
     
  •  
     
     
     
கடந்த சில வருடங்களாக முடக்குவாதத்தால் அவதிப்பட்டு வருகிறேன். எவ்வளவோ மருத்துவம் பார்த்தாகிவிட்டது. பெரிய பலன் இல்லை. இந்த நோய்க்கு ஆயுர்வேதம் என்ன தீர்வு சொல்கிறது?
- பெரியசாமி, தக்கலை

 
அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது Rheumatoid arthritis. 


இது ஒரு autoimmune disease. அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் திருடனைக் கடிக்காமல், தன்னை வளர்ப்பவரையே கடிப்பது போன்றது. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் மோசமான நிலை இது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். ஆனால், நடுத்தர வயதில் அதிகம் வரும். 

ஆண்களைவிடப் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும். இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சிகள் 
 நடந்துகொண்டிருக்கின்றன. 


பாதிப்புகள்

 
பொதுவாகக் கை, கால் மூட்டுகளில் பாதிப்பை வெளிப்படுத்தும். கை மூட்டுகள் அழற்சி ஏற்பட்டு வளைந்துபோகும். மணிப் பந்து மூட்டுகள், விரல்கள், கணுக்கால், முழங்கால் போன்றவை பாதிக்கப்பட்டு நீர் சேர்ந்து காணப்படும். மெதுவாகத் தொடங்கி மூட்டுகளை அழிக்கும் தன்மையைப் பெறும். 


மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. இதை morning stiffness என்று சொல்வார்கள். 


மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். மேலும் நுரையீரல் பாதிக்கப்படலாம். இதை pleurisy, interstitial lung disease என்று சொல்வோம். 


கண்கள், வாய் வறண்டு போகலாம். இதை rheumatoid nodules என்று சொல்வோம். உடலில் சிறு கழலைகள் தோன்றும். இதைக் கிரந்தி என்று சொல்வோம். இதை Hb, ESR, Anti CCP antibody என்று அழைப்பார்கள். வலி அவதிப்படுத்துவதால், இவர்களால் நன்கு தூங்க முடியாது. 



பரிசோதனை, மருந்துகள்

 
ரத்தத்தில் DMA RD போன்ற பரிசோதனையெல்லாம் தேவைப்படும். நவீன மருத்துவத்தில் வலிநிவாரணிகளும், முடக்குவாதத்தைத் தடுத்து நிறுத்துகிற steroids மருந்துகளையும், மலேரியாவுக்குக் கொடுக்கிற சில மருந்துகளையும் கொடுக்கிறார்கள். 

இப்பொழுது biological agents என்று சொல்லக்கூடிய மருந்துகள் வந்துள்ளன. இவற்றின் விலை அதிகம். 


சிகிச்சை

 
முடக்குவாதத்துக்கு முதலில் மூட்டுகளில் வலி, எரிச்சல், சிவப்பு நிறம், குத்தல், நீர்க்கட்டு போன்றவை இருந்தால் அட்டைப் பூச்சியைவிட்டு அசுத்த ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இது உடனடி நிவாரணத்தைத் தரும். 


பின்பு மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட நெய்யைத் தினசரி கொடுத்து, அந்த நெய் மலத்தில் வந்தவுடன் வியர்வை சிகிச்சை செய்து பேதிக்கு மருந்து கொடுத்து உடலைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்பு வஸ்தி சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். 


இந்த முடக்குவாதத்துக்கு மிகவும் சிறந்த மருந்து Tinospora cordifolia என்று சொல்லக்கூடிய சீந்தில் கொடி. இதைச் சூரணமாகவோ, மாத்திரையாகவோ கொடுத்தால் பலன் கிடைக்காது. 

ஆனால், இந்தத் தண்டை நீரில் ஊறவைத்து, இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக் குடிக்கும்போது, அதிகப் பலனைத் தருகிறது. 

அதைப் போல வயல் ஓரங்களில் சாதாரணமாகக் காணப்படும் நீர்முள்ளியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஆயுர்வேதம் இதை சாக போஜனம் என்று அழைக்கிறது. 


வலிக்குப் பிண்டத் தைலம், ஆரநாள தைலம், பலா குடூச்சியாதித் தைலம், அமிர்தாதி தைலம் போன்றவற்றைப் போட்டுக்கொள்ளலாம். குக்குலு, சிலாஜித் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நெல்லிக்காய், கடுக்காய் லேகியம், சியவன பிராச லேகியம் போன்றவை சிறந்தவை. மூலிகைகளால் காய்ச்சப்பட்ட பாலும், நெய்யும் சேர்த்து வஸ்தி செய்யலாம். 


அதற்குப் பிறகும் மூட்டில் நீர் இருந்தால் ஆமணக்கு விதையைப் பாலில் அரைத்துப் போடலாம். சதகுப்பை அரைத்துப் போடலாம். எள்ளும், மஞ்சளும் அரைத்துப் போடலாம். சீந்திலின் இலையை அரைத்துப் பற்று போடலாம். 

தசமூலம் என்று சொல்லக்கூடிய பத்து மருந்துகளின் தொகுப்பைப் பால் கஷாயம் செய்து நோயாளியின் உடலில் பிண்டத் தைலம் தேய்த்துத் தாரை போல் ஊற்றலாம். இது வலியைக் குறைக்கும். 


சில கைமருந்துகள்

 
#வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும். 


#முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து அவித்துத் தொடர்ந்து 15 நாட்களுக்குச் சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும். 


#பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்துக் காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற பிரச்சினைகள் குறையும். 


#முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும். 


#பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.

ரத்த அழுத்தம், நம் கட்டுப்பாட்டில்

 
 
 
ரத்த அழுத்தத்தைச் சரிசெய்வதில் வெள்ளைப்பூண்டு எந்தளவுக்கு உதவியாக இருக்கும்?

 
பூண்டில் உள்ள மருந்துப் பொருளான அலிசினை தினசரிப் பத்து மில்லிகிராம் வீதம் உட்கொண்டால் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்தஅழுத்தம், ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களில் முறையே ஐந்து மற்றும் பத்து புள்ளிகள் அளவுக்குக் குறையும். 


டென்னிஸ் பந்தைக் கையால் அமுக்குவதால் ரத்த அழுத்தம் குறையுமா?

 
இது ஐசோமெட்ரிக் பயிற்சி. 5 முதல் 19 புள்ளிகள் வரை ரத்த அழுத்தம் குறையும். 90 விநாடிகளுக்கு மிதமாகப் பந்தைக் கையில் வைத்து அமுக்க வேண்டும், பிறகு கையை மாற்றவும். இதை மூன்று முறை செய்யவும்.
ஒரு வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து தடவை இப்பயிற்சியைச் செய்யவும். ஆறு முதல் எட்டு வாரங்கள் செய்துவந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். 


காபி அருந்துவதை நிறுத்துவதால் ரத்த அழுத்தம் குறையுமா?

 
காலையில் ஒரு குவளை காபி அருந்தினால் ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரிக்கிறது என்று டியூக் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது குவளை காபியால் ஐந்து மடங்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் ஐந்து புள்ளிகள் அதிகரிக்கின்றன. காபியையும் சிகரெட்டையும் நிறுத்துவதால் ரத்த அழுத்தம் 20 புள்ளிகள் குறைகின்றன.

ஒற்றைத் தலைவலியை குறைக்கும் வழி

 
 
 
 
நவீன வாழ்க்கை முறை, வேலை நெருக்கடியால் மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பாதிப்பு கடுமையாக அதிகரித்துவருகிறது. சரியான வாழ்க்கை முறை, மாற்று மருத்துவ முறைகள் மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். 


சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வளர்ந்தவர்களில் 50 சதவீதம் பேர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றனர். வெளிச்சம், அதிகச் சத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதற்கான பொதுவான காரணங்கள். மூக்கடைப்பு, வாந்தி போன்றவை ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள். 


தாங்க முடியாத அளவுக்குத் தலையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலி, மிதமாகவோ அல்லது அதிகபட்ச அளவிலோ 4 மணி நேரம் முதல் மூன்று நாட்களுக்கு (72 மணி நேரம்வரை) நீடிக்கலாம். ஒற்றைத் தலைவலி ஒருமுறை வந்துவிட்டால், அதன் பின் அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு உண்டு. 


போதிய அளவுக்கு ஓய்வு எடுக்காமல் இருப்பது, சத்தான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலியால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். 


ஆயுர்வேத அணுகுமுறை

 
வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். பொதுவாக வலி தோன்றும் பகுதியில் குளிர்ந்த நீரை வைப்பது தற்காலிக நிவாரணம் தரும். 


ஆயுர்வேத சிகிச்சையில் இதற்கு நிவாரணம் கிடைக்கும். மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும். மன இறுக்கம், வேலைச் சூழல், ஹார்மோன் சமநிலையில்லாமை போன்ற காரணங்கள் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கின்றன. ஆயுர்வேதத்தில் இதை `சூர்யவர்தா’ என்று குறிப்பிடுகிறோம். 


தலையில் உள்ள நரம்புகள், ரத்தச் செல்கள் வீக்கமடைவதால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. உணர்ச்சிமிகுந்த - இறுக்கமான மனநிலை, வேலைச் சூழலால் அதிகரிக்கும் பணிப் பளு, உடல் அழற்சி, உணவுப் பழக்கத்தில் சீரற்ற நிலை, மது அருந்துதல், புகையிலை போடுதல், அதிக அளவில் மருந்து சாப்பிடுவது ஆகியவை காரணமாக ஒற்றைத் தலைவலி எனப்படும் `மைகிரேன்’ உருவாகிறது. 


பெண்களுக்குப் பொதுவாக ஹார்மோன் சீரற்ற நிலையால் அதாவது மாதவிடாய் காலம், குழந்தைப்பேறு காலம், மாதவிடாய் சுழற்சி நிற்கும் வேளைகளில் இது தோன்றுகிறது. 


வேலை இறுக்கம்: இப்போது இளைஞர்கள் பலரும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவதைக் காண முடிகிறது. பெரும்பாலும் அவர்களுடைய வேலை காரணமாக இளைஞர்களை இத்தலைவலி பாதிக்கிறது. இலக்கை எட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அதிக நேரம் கணினி வேலை காரணமாக ஒற்றைத் தலைவலி தூண்டப்படுகிறது. 


எப்படிச் சமாளிக்கலாம்?

 
நோயாளியின் உடல் அமைப்பைச் சரியாகக் கணித்து, அவரது பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும். அவரது உளவியல், உடலியல் சார்ந்த விஷயங்களைச் சரிவரக் கணித்து அவருக்கு ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைவலியின் அளவை மதிப்பிட வேண்டும். 


குறிப்பாக மூன்று முக்கிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சரியான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆகியவை தான் அந்த மூன்று வழிகள். 


வாழ்க்கை முறை மாற்றம்

 
இறுக்கமான சூழலிலிருந்து விலகி ஒய்வெடுப்பது. அதிக இரைச்சல் மற்றும் பிரகாசமான ஒளி ஆகியவற்றைத் தவிர்ப்பது. 


உணவுப் பழக்கம்: சரியான உணவு வகைகளை உண்பதன் மூலம் நோயாளியின் உடலியல் கூறுகள் மாறுபடும். இது தலைவலி உருவாவதற்கான காரணிகளை மட்டுப்படுத்தும். மேலும் தலைவலி அதிகரிப்பதைக் குறைக்கும்.

 அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவு வகைகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள், புளிப்புச் சுவையுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, உணவை மென்று சாப்பிடுவது ஆகியனவும் தலைவலியின் வீரியத்தைக் குறைக்கும். 


இரண்டு கட்ட சிகிச்சை

 
தலைவலியின் தன்மைக்கேற்ப ஆயுர்வேத சிகிச்சை முறை இரண்டு கட்டங்களாக அளிக்கப்படுகிறது. வேகவஸ்தா – தலைவலி ஏற்படும்போது, அவெகவஸ்தா – தலைவலி இல்லாதபோது என இரண்டு வகைப்படும். 


வேகவஸ்தா சிகிச்சையின்போது ஆயுர்வேத முறைப்படி சாப்பிடக்கூடிய மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இவை வயிற்றைச் சுத்தம் செய்ய உதவும். 

வயிற்றில் தங்கியுள்ள நச்சுகளை அகற்ற இவை உதவும். இதுதவிர வெளிப் பயன்பாட்டுக்குச் சில எண்ணெய்கள் தரப்படுகின்றன. இது ரத்த நாளங்களைச் சீராக்கி ரத்த ஓட்டத்தைச் சமன் செய்கிறது. 


அவெகவஸ்தா முறையில் ஒற்றைத் தலைவலி இல்லாத வேளையிலும் தற்காப்பு மருந்துகளை மருத்துவர் அளிப்பார். இதன்மூலம் ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படுவது தடுக்கப்படும். 

ஆயுர்வேத சிகிச்சையில் நஸ்யம், சிரோத்ரா, சிரோவஸ்தி ஆகிய சிகிச்சைகள் இதற்கு அளிக்கப்படுகின்றன. 


மற்ற சிகிச்சைகள்

 
நஸ்யம்: இந்த முறையில் மருத்துவக் குணங்கள் கொண்ட எண்ணெயைத் தலை, முகத்தில் தடவ வேண்டும். 

அது நன்கு ஊறிய பிறகு நாசித் துவாரங்களில் சில மருந்துகளை ஊற்ற வேண்டும். 

ஆயுர்வேத சிகிச்சையில் அளிக்கப்படும் மருந்துகளின் அளவு, அவற்றின் தன்மை ஆகியவை நோயின் வீரியத்துக்கு ஏற்பவும் நோயாளியின் வயதுக்கு ஏற்பவும் பருவ நிலைக்கு ஏற்பவும் மாறுபடும். நஸ்யம் சிகிச்சையின்போது வீக்கமடைந்த பகுதிகள், பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடையும். 


இந்தச் சிகிச்சையைக் குறைந்தது 7 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிரோவஸ்தி: வெதுவெதுப்பான நீரில் மருந்து எண்ணெயை ஊற்றி, இதற்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தொப்பியாக அணிந்துகொள்ள வேண்டும். 


இந்த வகை சிகிச்சை மன இறுக்கம் சார்ந்த ஒற்றைத் தலைவலிக்கு மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள்: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

கோப்பு படம் 
 
 
தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். போலி டாக்டர்கள் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. 


பி.காம். படித்துவிட்டு ஓர் ஆண்டாக சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி டாக்டர் வெங்கடேசன் (57) என்பவரை கடந்த நவம்பர் மாதம் போலீஸார் கைது செய்தனர். 

கடந்த 5 நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் போலீஸ் அதிரடி சோதனையில் 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ராஜபாளையத்தில் 7, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு போலி டாக்டர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். 


எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் மருத்துவம் படித்த உண்மையான டாக்டர் யார்? போலி டாக்டர் யார்? என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். 


80 ஆயிரம் டாக்டர்கள் 
 
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் வி.எஸ்.துரைராஜ் கூறியதாவது: 

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் 1915-ம் ஆண்டு முதல் இதுவரை 1,09,252 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்து இருப் பார்கள். சில டாக்டர்கள் வெளிநாடுகளில் குடியேறி உள்ளனர். தற்போது தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். 

போலி டாக்டர்களை எளிதில் கண்டுபிடிக்க டாக்டர்கள்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

மருத்துவம் படித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த டாக்டர்கள் அனைவரும் தங்களுடைய பதிவு எண் சான்றிதழை, சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். 

நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தன்னுடைய பெயர், படிப்பு மற்றும் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

30 ஆயிரம் போலிகள் 
 
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது: 

தமிழகம் முழுவதும் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வரும் சுமார் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். 

போலி டாக்டர் செய்யும் தவறு, உண்மையான அனைத்து டாக்டர்களையும் பாதிக்கிறது. இதனால் டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை போய்விடுகிறது. 

எனவே போலி டாக்டர்களை கண்டுபிடிக்க மாவட்டந் தோறும் தனிப்படை அமைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 


புகார் அளிக்கலாம் 
 
பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்லும் போது, அந்த டாக்டர் போலி என்ற சந்தேகம் இருந்தாலோ அல்லது போலி டாக்டர் என தெரியவந்தாலோ உடனடியாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு, எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம். 


தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை 044-26265678 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். போலி டாக்டர் என தெரியவந்தால், போலீஸில் ஒப்படைத்து விடுவோம் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் வி.எஸ்.துரைராஜ் தெரிவித்தார்.

Saturday 10 January 2015

வாய் நாற்றம் ஏற்படுவது ஏன்?

 
 
 
நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நாற்றம்கூடக் காரணமாக இருக்கலாம். 


தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசரகதி வாழ்க்கை முறையாலும் ‘வாய் நாற்றம்’ (Halitosis) என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. 


என்ன காரணம்?

 
பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மைக் காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள். 

சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும். அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், இந்த உணவுப் பொருள்களுடன் வினை புரியும். இதனால், உணவுத் துகள்கள் அழுகும். அப்போது கந்தகம் எனும் வேதிப்பொருள் உருவாகும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் நாற்றத்துக்கு அடிப்படைக் காரணம். 

பற்களில் காரை படிவது, பல் ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்தஒழுக்கு உண்டாவது, சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை வரவேற்கும் காரணிகள். வாய்ப் புண், வாய்ப் புற்றுநோய், 'சிபிலிஸ்' எனும் பால்வினை நோய், வின்சென்ட் நோய், எய்ட்ஸ் நோய் போன்றவையும் வாய் நாற்றத்துக்கு அழைப்பிதழ் அனுப்பும்.


மேலும், மூக்கில் சதை வளர்வது (Nasal polyp), அந்நியப் பொருள்கள் மாட்டிக்கொள்வது, சைனஸ் அழற்சி (Sinusitis), தொண்டைப் புண், தொண்டைச் சதைகளில் சீழ், நுரையீரல்களில் சீழ் (Lung abscess), நுரையீரல் காசநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றாலும் வாய் நாற்றம் ஏற்படலாம். இவை தவிர, உணவுக் குழாய் அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், உணவு அஜீரணம், கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகக் கோளாறுகள் ஆகிய நோய்களின்போதும் வாய் நாற்றம் உண்டாவது உண்டு. 


என்ன சிகிச்சை?

 
வாய் நாற்றம் உள்ளவர்கள் முதலில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் ‘ஸ்கேலிங்' முறையில் பற்களைச் சுத்தம் செய்துகொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது-மூக்கு-தொண்டை சிறப்பு மருத்துவர் உதவியுடன் சைனஸ் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்-ரே, எண்டாஸ்கோபி (Endoscopy) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவற்றால் மற்றக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய் நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 

தடுப்பது எப்படி?

 
வாய் நாற்றத்தைத் தடுக்க விரும்புவோர் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை பற்களைத் துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளைப் பயன்படுத்தினால் பல் ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். மிருதுவான பல்துலக்கிகளைப் பயன்படுத்துவது நல்லது. 

அடுத்து, சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, நாக்கின் பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. பெரும்பாலோருக்கு வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.
இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவு வகைகளைச் சாப்பிட்ட பின்பு, பற்களின் இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்றுவதற்குப் பலரும் பல்குச்சியைப் பயன்படுத்துவார்கள். அப்படி அடிக்கடி பற்களைக் குத்தும்போது, குச்சி பல் ஈறுகளில் பட்டு புண்ணை ஏற்படுத்திவிடும், இது வாய் நாற்றத்தை அதிகரித்துவிடும். எனவே, பல்குச்சிகளைக் கவனமாகக் கையாள வேண்டும் அல்லது இதற்கென்றே உள்ள பல்துலக்கி வயர்களைப் பயன்படுத்த வேண்டும். 

செயற்கைப் பல்லைப் பயன்படுத்துபவர்கள் இரவில் அதைக் கழற்றி வைத்துவிடுவது நல்லது. ஒவ்வொரு முறை உணவு உண்டதும் செயற்கைப் பல்லைக் கழற்றி, அதற்கென உள்ள பல்துலக்கியால் சுத்தப்படுத்த வேண்டும்.பல் மற்றும் ஈறுகளின் நலனைக் கெடுக்கிற புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. 

செயற்கை மணமூட்டிகள் தேவையா?
 
நேர்காணலுக்குச் செல்லும்போதும் சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடும்போதும் செயற்கை மணமூட்டிகளைப் பயன்படுத்தலாம். அதேவேளையில் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள சில வேதிப்பொருள்கள் பற்களைக் கெடுத்துவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதனால் இவற்றுக்குப் பதிலாக லவங்கம், ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கை மணமூட்டிகளை வாயில் சிறிது நேரம் அடக்கிக்கொண்டால் வாய் மணக்கும். 

வாய் உலரும் பிரச்சினை
 
வயது ஆக ஆகப் பலருக்கு உமிழ்நீர் சுரப்பது குறைந்து, வாய் உலர்வது அதிகரிக்கும். இது வாய் நாற்றத்துக்கு வழிவகுக்கும். இந்த நிலைமையைத் தடுக்க அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். காரட், வெள்ளரிக்காய், சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய் கனிகளைச் சாப்பிட்டு வந்தால் வாய் உலராது. மேலும், வாயை உலர வைக்கும் மாத்திரைகளைச் சாப்பிடும்போது, மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்வதும் முக்கியம். 


நீரிழிவு நோயாளிகள் கவனிக்க!
 
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதிக தாகம் எடுக்கும். அப்போது வாய் அடிக்கடி உலர்ந்துவிடும். இதன் விளைவால், பல் ஈறுகள் கெட்டு வாய் நாற்றம் ஏற்பட வழி உண்டாகும். 

மவுத் வாஷ் பயன் தருமா?
 
வாய் நாற்றத்தைப் போக்கி, புத்துணர்வை உண்டாக்க என்று பல்வேறு ‘மவுத் வாஷ்’ திரவங்கள் கிடைக்கின்றன. இவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பல் மருத்துவரின் ஆலோசனையுடன் தேவைப்படும்போது பயன்படுத்துவதே நல்லது. ஏனென்றால், மவுத் வாஷைப் பயன்படுத்தும்போது தீமை தரும் பாக்டீரியாக்களுடன், வாய்க்குள் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகின்றன. இது வாயின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். எனவே, மவுத் வாஷ் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

‘ஃபிளாஸ்ஸிங்’ உதவும்!
 
பல்துலக்கியால் பல் துலக்கும்போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள பகுதிக்குப் பல்துலக்கியின் இழைகள் நுழையாது. ஆனால், இங்குள்ள உணவுத் துகள்தான் நமக்கு எதிரி! இதை முதலில் வெளியேற்ற வேண்டும். பற்களை ஃபிளாஸ்ஸிங் (Flossing) செய்வதன் மூலம், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்துவிடலாம். 

பல் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் பொருத்தமான ‘டென்டல் ஃபிளாஸ்ஸிங் நூலை’வாங்கி, இரண்டு பற்களுக்கு இடையில் அதைச் செலுத்தி, மேலும் கீழும் மெதுவாக இழுக்கும்போது, அங்குள்ள உணவுத் துகள், கரை, அழுக்கு எல்லாமே வெளியேறிவிடும். அதன் பிறகு, வாய் நாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும்.