Friday 19 September 2014

ஆயுள் கூட மூன்றாம் பிறை தரிசனம்

ஆயுள் கூட மூன்றாம் பிறை தரிசனம்

 

 ஆயுள் கூட மூன்றாம் பிறை தரிசனம் 

 

 அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

எந்த நாளில் மூன்றாம் பிறை வரும் என்பதில் சந்தேகம் இருந்தாள் பஞ்சாங்கம் மற்றும் காலண்டரை பாருங்கள். அதில் வளர்பிறையில், சந்திர தரிசனம் என்று போட்டிருக்கும். அந்நாளில் ஸந்தியாகாலத்தில் மூன்றாம் பிறை சந்திரனைத் தரிசித்தால் ஆயுள் கூடும்.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை அல்லது ஆயிரம் பெளர்ணமி பார்த்தால் முக்தி என சொல்லப்படுகிறது.

ஒரு மூன்றாம் பிறையை கூட விடாமல் பார்த்திருந்தால் தன்னுடைய 84 வயது ஆகும் போது ஆயிரம் பிறையை பார்த்திருக்கக்கூடும் என்பதாகும்.

நூறு வயது ஆனத்திற்குச் சமமாக ஆயிரம் மூன்றாம் பிறை பார்த்தவர்கள் 84 வயதை கடந்தவர்கள் ஆவர். அதனால் இவர்கள் சதாபிஷேகம் என்னும் நற்சடங்கினை செய்து கொள்ளும் தகுதியை அடைகிறார்கள்.

ஆதலால் அனைவரும் மூன்றாம் பிறையை தரிசித்து தங்களுடைய ஆயுளை கூட்டிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment